03 Nov 2021

"ண் ந் & ன் " எங்கு எது வரும்?




ந___றி 


பேரன்: தாத்தா! இந்த இடத்துல  ரெண்டு சுழியா (ன) , மூணு சுழியா ( ) இல்ல காகா 'ந' வருமா ?
தாத்தா: அது என்ன "காகா -ந"?

பேரன்: காகா வரையும்போது ஒரு '' போடுவோமே, அதான்.
தாத்தா: தந்நகரமா ?

பேரன்: அப்டினா? இது இன்னொரு ந வா?
தாத்தா: அதுக்கு பேரு தந்நகரம், காகா ந இல்ல.

பேரன்: இவ்வளுவு நாள் அப்படித்தானே சொல்லிட்டு இருந்தேன், சரி இங்க எந்த 'ந' வரும்?
தாத்தா: இந்த மூணு  ' , ண, ன'  பேர சரியா சொன்னாலே உனக்கு தெரிஞ்சிடும்.

பேரன்: எப்படி சொல்றது?
தாத்தா:
                     ண் --> டண்ணகரம்
                      ந் --> தந்நகரம் 
                      ன் --> றன்னகரம்



பேரன் : எப்படி  ண் --> ட, ந் --> த, ன் -->ற ?
தாத்தா: இன எழுத்துக்கள், முன்னாடி பாத்தோமே   (இன எழுத்துக்கள்)

பேரன்: ஆமா! பாத்தோம், மறந்துடுச்சு... வேற எப்படி ஞாபகம்  வெச்சிக்கறது?
தாத்தா: மெய் எழுத்துக்கள் வரிசையில தொடர்ந்து வரும்

"க் ங் ச் ஞ் ட் ண்  த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்"


பேரன்: ஓ...சரி சரி ...

தாத்தா: இப்ப கடிதத்துல, இந்த வார்த்தைக்கு எது  வரும் ?      ந__றி ?
பேரன்: றி வந்திருக்கு, அப்டினா றன்னகரம் (ன) தான் வரும் "நன்றி"

தாத்தா: சரியா சொன்ன.. இன்னொரு பயிற்ச்சி உனக்கு ..
பேரன்: சொல்லுங்க !

தாத்தா: "வ__டு" - இது ஒரு பூச்சி வகை
பேரன்: பின்னாடி டு வந்திருக்கு, அப்டினா மூணு சுழி தான் வரும். 

தாத்தா: சரி தான், "வண்டு" ..ஆனா இனிமே டண்ணகரம்னு சொல்லணும்
பேரன்: ஆமா ஆமா ..டண்ணகரம்

தாத்தா: "ஆ__தை" - இந்த பறவைக்கு கண்ணு பெருசா இருக்கும்
பேரன்: தை வந்திருக்கு அப்டினா .. காகா ந ..இல்ல இல்ல..தந்நகரம் வரும்

தாத்தா:  சரியா சொன்ன "ஆந்தை" , இப்ப எளிதா இருக்கா ?
பேரன்: ஆமா தாத்தா ! எளிதா இருக்கு..

தாத்தா:  ப__றி,  இப்ப என்ன வரும் ?
பேரன்: றன்னகரம்



தாத்தா: இந்த மாதிரி இலக்கண குறிப்புலாம் இந்த புத்தகத்துல எழுத்திற்கேன், தேவைப்படும் போது  பாத்துக்கோ.
பேரன்: சரி தாத்தா. 



  குறிப்பு புத்தகம்

 

"ண் ந் & ன் " பயன்பாடு


குறிப்பு #1 -பெயர் காரணம்
 
காகா ந -->            ந்நகரம்             ந் =  த
மூணு சுழி -->       
ண்ணகரம்      ண் = ட
 ரெண்டு சுழி -->   
ன்னகரம்         ன் = ற 

காரணம்
: ஒலிப்பு முறையின் ஒற்றுமை (இன எழுத்துக்கள்)
       
ண்ட = குண்டு ,கொண்டு, மண்டபம்

ந்த  = சந்தி, வந்து, பந்து 

ன்ற = தென்றல், மன்றம், இன்று


 ட், ண் - இவை நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.

த், ந் - மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.

ற், ன் -  மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.


                                                                    இன எழுத்துக்கள்


குறிப்பு #2 - சொல்லின் முதல் எழுத்து
 
எப்பொழுதும்  சொல்லின் முதல் எழுத்தாக தந்நகர உயிர்மெய் மட்டுமே வரும்

             
நண்பன், நிலம், நீளம்
   ( ணண்பன், னிலம், ணீளம் )


இந்த குறிப்புக்கள் "ண் ந் & ன் " பயன்பாட்டுத் தவறுகளை குறைக்க உதவும்.
 
ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி